செய்திகள்

தருமபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு

Published On 2018-09-14 14:37 GMT   |   Update On 2018-09-14 14:37 GMT
தருமபுரியில் வீட்டின் வெளியில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை திருடிய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
தருமபுரி:

தருமபுரி பெரியார் தெருவில் உள்ள ஆண்டாள் நிலையத்தை சேர்ந்தவர் அசோகன் வயது(50). இவர் தருமபுரி தலைமை தபால் நிலையம் அருகே ஓட்டல் நடத்தி வருகிறார். இவர் கடந்த 8-ந் தேதி இரு சக்கர வாகனத்தை வீட்டின் வெளியே நிறுத்திவிட்டு ஓட்டலுக்கு சென்றுவிட்டார்.

பின்னர் மாலை திரும்பி வந்து பார்த்த போது வண்டியை காணவில்லை. அசோகன் வண்டியை பல இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. இது குறித்து அசோகன் நேற்று தருமபுரி டவுண் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். #tamilnews
Tags:    

Similar News