செய்திகள்

முத்துப்பேட்டை அருகே பஸ்சிலிருந்து தவறி விழுந்தவர் பலி

Published On 2018-09-14 09:59 GMT   |   Update On 2018-09-14 09:59 GMT
முத்துப்பேட்டை அருகே பஸ்சிலிருந்து தவறி விழுந்தவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

முத்துப்பேட்டை:

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த ஆலங்காடு கிழக்கு கடற்க்கரை சாலையில் சாயல்குடியிலிருந்து சிதம்பரம் நோக்கி அரசு பஸ் ஒன்று சென்றுக் கொண்டிருந்தது. அப்பொழுது அந்த பஸ்சில் குடித்து விட்டு பயணம் செய்த சென்னை பல்லாவரம் பகுதியை சேர்ந்த ஆல்பர்ட்(வயது45) என்பவர் தவறி சாலையில் விழுந்து படுகாயம் அடைந்தார்.

அவரை மீட்டு திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சேர்ந்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இதுகுறித்து அரசு பஸ்சின் கண்டக்டர் ராமநாதபுரத்தை சேர்ந்த சந்திரசேகரன் முத்துப்பேட்டை போலீசில் கொடுத்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கணபதி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.

Tags:    

Similar News