செய்திகள்

திருச்சியில் விபத்தில் வங்கி ஊழியர் பலி

Published On 2018-09-13 14:21 GMT   |   Update On 2018-09-13 14:21 GMT
பைக் விபத்தில் பலத்த காயம் அடைந்த வங்கி ஊழியர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும் சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார்.
திருச்சி:

திருச்சி கருமண்டபம் புது செல்வ நகரை சேர்ந்தவர் முத்து. இவரது மகன் அழகு ராஜா (29), திருச்சியில் உள்ள ஒரு வங்கியில் பணிபுரிந்து வந்தார். சம்பவத்தன்று இவர் திருச்சி அரிஸ்டோ பாலத்தில் தனது பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து பாலத்தின் பக்கவாட்டு சுவரில் மோதி உள்ளது. இதனால் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. 

பின்னர் அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு திருச்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் நேற்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

இது குறித்து திருச்சி தெற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News