செய்திகள்

மேட்டூரில் கோர்ட்டு அலுவலக ஊழியர் அதிரடி கைது- சக பெண் ஊழியர்களிடம் தகராறு

Published On 2018-09-11 12:02 GMT   |   Update On 2018-09-11 12:02 GMT
மேட்டூரில் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் சக பெண் ஊழியரிடம் தகராறில் ஈடுபட்டது தொடர்பாக அலுவலக ஊழியரை போலீசார் கைது செய்தனர்.
மேட்டூர்:

சேலம் மாவட்டம் மேட்டூரில் உள்ள கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் அலுவலக உதவியாளராக பணியாற்றி வருபவர் ராஜா முகமது (வயது 36). இவர் சேலம், கிச்சிப்பாளையத்தை சேர்ந்தவர் ஆவார்.

இவர், நீதிமன்றத்தில் பணியாற்றும் பெண் ஊழியர்களிடம் தகாத வார்த்தைகளால் பேசி, அவர்களை பணி செய்ய விடாமல் தடுத்ததாக பெண் ஊழியர்கள் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி திருநாவுக்கரசுவிடம் புகார் செய்தனர்.

அதன்படி நீதிபதி மேட்டூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதையடுத்து மேட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜா முகமதுவை அதிரடியாக கைது செய்தனர். #tamilnews
Tags:    

Similar News