செய்திகள்

முழு அடைப்பின் போது போராட்டம்- திருநாவுக்கரசர் உள்பட 250 பேர் மீது வழக்கு

Published On 2018-09-11 07:18 GMT   |   Update On 2018-09-11 07:18 GMT
பெட்ரோல்-டீசல் விலை உயர்வுக்கு எதிரான போராட்டத்தின் போது போலீஸ் அனுமுதி பெறாமல் கூட்டம் திரட்டியதால் திருநாவுக்கரசர் உள்பட 250 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை:

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் நாடு முழுவதும் நேற்று பந்த் நடந்தது.

தமிழகத்தில் நடந்த பொது வேலைநிறுத்தத்தையொட்டி சென்னையில் சேப்பாக்கத்தில் தமிழக காங்கிரஸ் தலைர் திருநாவுக்கரசர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் அனைத்து கட்சி சார்பில் முன்னணி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

இந்த போராட்டம் போலீஸ் அனுமதி பெறாமல் நடத்தப்பட்டுள்ளது. அதனால் திருவல்லிக்கேணி போலீசார் போராட்டத்தை நடத்திய காங்கிரசார் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

போலீஸ் அனுமதியின்றி திடீரென அரசியல் கட்சிகளை ஒன்று திரட்டி போராட்டம் நடத்திய திருநாவுக்கரசர் உள்பட 250 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 143, 188 மற்றும் சென்னை போலீஸ் சட்டப்பிரிவு 41 (6) ஆகிய மூன்று பிரிவின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
Tags:    

Similar News