செய்திகள்

முழு அடைப்பு போராட்டம் மகத்தான வெற்றி - திருநாவுக்கரசர்

Published On 2018-09-11 05:03 GMT   |   Update On 2018-09-11 05:03 GMT
பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் கண்டித்து நடத்தப்பட்ட முழு அடைப்பு போராட்டம் மகத்தான வெற்றி பெற்றதாக திருநாவுக்கரசர் தெரிவித்தார். #BharatBandh #PetrolDieselPrice #Thirunavukkarasar
சென்னை:

பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் கண்டித்து காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் சார்பில் நேற்று நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டம் வெற்றி பெற்றிருப்பதாக காங்கிரஸ் கட்சியும், தோல்வி அடைந்ததாக பாஜகவும் கூறி வருகின்றன.



அவ்வகையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் கூறுகையில், ‘பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி நடத்திய முழு அடைப்பு போராட்டம் மகத்தான வெற்றி பெற்றுள்ளது’ என்றார்.

தமிழகத்தில் அதிமுக தவிர்த்து முழு அடைப்பில் பங்கேற்ற மற்றும் ஒத்துழைப்பு வழங்கிய அனைத்துக் கட்சிகள், வணிகர் அமைப்புகளுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் திருநாவுக்கரசர் கூறினார். #BharatBandh #PetrolDieselPrice #Thirunavukkarasar
Tags:    

Similar News