செய்திகள்

ஆண்டிப்பட்டி அருகே பெண் உள்பட 3 பேர் தற்கொலை

Published On 2018-09-10 10:10 GMT   |   Update On 2018-09-10 10:10 GMT
ஆண்டிப்பட்டி அருகே நோய் கொடுமையால் பெண் உள்பட 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர். இதுகுறித்து வருசநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆண்டிப்பட்டி:

ஆண்டிப்பட்டி அருகே வைகைபுதூரை சேர்ந்தவர் லோகநாதன் (வயது43). நோய் கொடுமையால் அவதிப்பட்டு வந்த இவர் வீட்டிலேயே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ஆண்டிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆண்டிப்பட்டி அருகே துரைச்சாமிபுரம் அரச மரத்தெருவை சேர்ந்தவர் முருகன் மனைவி காலாமணி (38). நோய்கொடுமையால் அவதிப்பட்டு வந்த காலாமணி வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கடமலைக்குண்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அரண்மனைபுதூர் கோம்பை பகுதியை சேர்ந்தவர் சாமிநான் (32). இவருக்கு திருமணம் ஆகி ஒரு குழந்தை உள்ளது. பள்ளத்தூர் தோட்டத்தில் வேலை பார்த்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சாமிநாதன் மாயமானார். அவரை தேடி வந்த நிலையில் அதே பகுதியில் உள்ள தோட்டத்தில் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து வருசநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News