செய்திகள்

நோய் கொடுமையால் டெம்போ டிரைவர் தூக்குபோட்டு தற்கொலை

Published On 2018-09-09 16:48 GMT   |   Update On 2018-09-09 16:48 GMT
புதுவையில் நோய் கொடுமையால் டெம்போ டிரைவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

புதுச்சேரி:

புதுவை புதுசாரம் அன்னை தெரசா நகரை சேர்ந்தவர் நாராயணன் (வயது 56). டெம்போ டிரைவரான இவர், கடந்த சில நாட்களாக நோய் கொடுமையால் அவதிப்பட்டு வந்தார். இதனால் டெம்போ ஓட்ட செல்ல முடியாமல் வீட்டிலேயே முடங்கி இருந்தார்.

இந்த நிலையில் நாராயணனுக்கு நேற்று நோய் கொடுமை அதிகமானதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த நாராயணன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவர் மின் விசிறியில் நைலான் கயிற்றால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து அவரது மகன் அருண்குமார் கொடுத்த புகாரின் பேரில் கோரிமேடு போலீஸ் ஏட்டு வெங்கடேசன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News