செய்திகள்

பெற்றோர் கண்டித்ததால் கல்லூரி மாணவி தற்கொலை

Published On 2018-09-08 16:16 GMT   |   Update On 2018-09-08 16:16 GMT
செல்போனில் பாட்டு கேட்பதை பெற்றோர் கண்டித்ததால் கல்லூரி மாணவி துக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வள்ளியூர்:

ராதாபுரம் அருகே உள்ள பாப்பான்குளத்தை சேர்ந்தவர் இசக்கியப்பன். விவசாயி. இவரது மகள் உமாபாரதி (வயது 19). இவர் நாகர்கோவிலில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வந்தார். இந்நிலையில் நேற்று வீட்டில் இருக்கும் போது செல்போனில் பாட்டு கேட்டபடி இருந்துள்ளார். இதற்கு அவரது பெற்றோர் வீட்டு வேலைகளை செய்யாமல் பாட்டு கேட்கிறீயே என கண்டித்துள்ளனர். 

இதில் மனம் உடைந்த அவர் குளியலறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ராதாபுரம் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராதாபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News