தேவதானப்பட்டி அருகே குடும்ப தகராறில் மனைவியை குத்தி கொன்ற கணவர்
தேவதானப்பட்டி:
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள தேவதானப்பட்டி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது40). இவரது மனைவி தீபா (27). இவர்களுக்கு தேஜஸ்ரீ, பிரதீபா என 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.
மணிகண்டன் குடும்பத்துடன் திருப்பூரில் உள்ள தனியார் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு கீதா (32) என்ற பெண்ணுடன் மணிகண்டனுக்கு பழக்கம் ஏற்பட்டது. கீதாவை 2-வது திருமணம் செய்து கொண்டார். சில காலம் தீபா, கீதா மற்றும் குழந்தைகளுடன் திருப்பூரில் மணிகண்டன் தங்கி இருந்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு தகராறு ஏற்பட்டதால் தீபா கோபித்துக்கொண்டு தேவதானப்பட்டிக்கு வந்து விட்டார்.
இதனைத் தொடர்ந்து மணிகண்டன் இன்று காலை தேவதானப்பட்டிக்கு வந்து தீபாவிடம் சமரசம் பேசி உள்ளார். இருந்தபோதும் பிரச்சினை தொடர்ந்து கொண்டே இருந்தது.
இதனால் குழந்தைகளை அருகில் உள்ள கடைக்கு அனுப்பி வைத்துள்ளார். பின்பு தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து தீபாவை சரமாரியாக குத்தினார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த தீபா சம்பவ இடத்திலேயே பலியானார்.
தகவல் அறிந்த பெரிய குளம் டி.எஸ்.பி.ஆறுமுகம் தலை மையில், இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் தேவதானப்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீபாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து மணிகண்டனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமாகி 7 வருடங்களே ஆவதால் ஆர்.டி.ஓ. மேல் விசார ணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.