செய்திகள்

சாத்தான்குளம் அருகே தொழிலாளி மீது தாக்குதல்-பைக் எரிப்பு: 3 பேர் மீது வழக்கு

Published On 2018-09-07 17:31 GMT   |   Update On 2018-09-07 17:31 GMT
சாத்தான்குளம் அருகே தொழிலாளி மீது தாக்குதல் நடத்தி மோட்டார்சைக்கிளை எரித்த மாநில இந்து முன்னணி பொதுச்செயலாளர் மகன் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சாத்தான்குளம்:



சாத்தான்குளம் அருகே உள்ள பூச்சிக்காட்டை சேர்ந்தவர் பாலையா (வயது 22). இவர் திசையன்விளையில் உள்ள ஒரு கடையில் தொழிலாளிளாக வேலை பார்த்து வருகிறார். இவரது நண்பர் தியாகராஜன். இந்நிலையில் சம்பவத்தன்று வேலை முடிந்து பாலையா தனது பைக்கில் ஊர் திரும்பி கொண்டிருந்தார். அப்போது பெட்ரோல் இல்லாமல் பைக் நின்றது.

இதையடுத்து பாலையா தனது நண்பர் தியாகராஜன் மூலம் பெட்ரோல் வாங்கி பைக்கில் ஊற்றி கொண்டிருந்தார். இதையடுத்து அங்கு வந்த பனைவிளையை சேர்ந்த அரசுராஜா மகன் பூபதி மற்றும் சுடலைமணி, பூச்சிக்காட்டை சேர்ந்த சுயம்புலிங்கம் ஆகியோர் எதற்காக இங்கு நிற்கின்றனர் என கூறி பாலையாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதம் முற்றவே ஆத்திரமடைந்தவர்கள் பாலையாவை அடித்து, உதைத்தனர்.

இதையடுத்து தியாகராஜன் தனது பைக்கை அங்கேயே நிறுத்திவிட்டு பாலையாவுடன் அவரது பைக்கில் சென்றுவிட்டனர். இதைத்தொடர்ந்த அங்கு நின்ற தியாகராஜன் பைக்கை பூபதி உள்ளிட்ட 3 பேரும் சேர்ந்து பெட்ரோல் ஊற்றி எரித்துவிட்டு தப்பிசென்றுவிட்டனர். இது குறித்து பாலையா தட்டார்மடம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பூபதி உள்ளிட்ட 3 பேரை வலைவீசி தேடிவருகின்றனர்.

பூபதி தந்தை அரசுராஜா மாநில இந்து முன்னணி பொதுச்செயலாளராக இருந்துவருகிறார்.
Tags:    

Similar News