செய்திகள்

கரூர் ஜி.கே. வித்யா மந்திர் பள்ளியில் மாவட்ட அளவிலான பெண்கள் கபடி போட்டி

Published On 2018-09-07 16:09 GMT   |   Update On 2018-09-07 16:09 GMT
கரூர் மாவட்ட அளவில் பள்ளிகளுக்கு இடையேயான பெண்கள் கபாடி போட்டி கரூர் மலையூர் ஜி.கே. வித்யா மந்திர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.
கரூர்:

கரூர் மாவட்ட அளவில் பள்ளிகளுக்கு இடையேயான பெண்கள் கபாடி போட்டி கரூர் மலையூர் ஜி.கே. வித்யா மந்திர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இதில் மாவட்டம் முழுவதிலும் இருந்து 30-க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றன. பள்ளி தாளாளர் விசா. ம.குணசேகரன் தலைமை தாங்கினார். 

முதல்வர் கார்த்திகேயன் வரவேற்றார். துணை போலீஸ் சூப்பிரண்டு கும்மராஜா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு போட்டியினை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் கொங்கு கல்வி அறக்கட்டளை இணை செயலாளர் விசா. ம.சண்முகம், மாவட்ட உடற் கல்வி ஆய்வாளர் அமலி டெய்சி மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் ஜெயபால், முத்துச்சாமி, ஜெயச்சந்திரன், மகாமணி, சுகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

போட்டியில் வெற்றி பெற்ற வீராங்கனைகளுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங் கப்பட்டன.
Tags:    

Similar News