செய்திகள்

வந்தவாசி அருகே ஆட்டு பண்ணை அதிபர் வீட்டில் கொள்ளை

Published On 2018-09-07 11:56 GMT   |   Update On 2018-09-07 11:56 GMT
வந்தவாசி அருகே ஆட்டு பண்ணை உரிமையாளர் வீட்டில் 13 சவரன் நகை ரூ.60 ஆயிரம் பணம் கொள்ளை போனது.
வந்தவாசி:

வந்தவாசி அடுத்த மழையூர் எடப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி ( வயது 55) ஆட்டு பண்ணை உரிமையாளர். இவரது மனைவி எல்லம்மாள். மகள் சசிகலா, மருமகன் செந்தில்குமார் ஆகியோர் நேற்று இரவு வீட்டை பூட்டி விட்டு காற்றுக்காக மாடியில் தூங்கினர்.

இன்று காலை சுப்பிரமணி குடும்பத்தினர் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது அறையில் வைக்கப்பட்டிருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 13 சவரன் தங்க நகை மற்றும் ஆடு விற்பனை செய்து வைத்திருந்த ரூ. 60 ஆயிரம் ரொக்கப்பணம் ஆகியவை திருடுபோனது தெரியவந்தது. இதுகுறித்து சுப்பிரமணி வடவணக்கம்பாடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

வந்தவாசி டிஎஸ்.பி. பொற்செழியன், வடணக்கம் பாடி இன்ஸ்பெக்டர் முரளிதரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.
Tags:    

Similar News