செய்திகள்

வீரபாண்டி அருகே பெண்ணிடம் நகையை பறித்து சென்ற வழக்கில் 2 பேர் கைது

Published On 2018-09-05 18:15 GMT   |   Update On 2018-09-05 18:15 GMT
வீரபாண்டி அருகே பெண்ணிடம் நகையை பறித்து சென்ற வழக்கில் 2 பேரை போலீசார்கைது செய்தனர்.
நல்லூர்:

பல்லடம் அருகே உள்ள தொங்குட்டிபாளையம் பொன்நகரை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவருடைய மனைவி வசந்தா. இவர்களுடைய மகன் அருண்.இவர் வீரபாண்டி சபரிநகரில் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் கடந்த ஜூலை மாதம் 14-ந் தேதி அருணை பார்க்க, அவருடைய தாயார் வசந்தா வீரபாண்டி பி.ஏ.பி. வாய்க்கால் வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த ஆசாமிகள் 2 பேர், திடீரென்று வசந்தா அணிந்து இருந்த 5 பவுன் தாலி சங்கிலியை பறித்துள்ளனர். ஆனால் வசந்தா, தனது தாலியை இறுக பிடித்துக்கொண்டார். இதனால் அந்த ஆசாமிகளின் கையில் 3 பவுன்நகை மட்டும் சிக்கியது. அந்த 3 பவுன்நகையுடன் அந்த ஆசாமிகள் 2 பேரும் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

இந்த நகை பறிப்பு சம்பவம் தொடர்பாக வீரபாண்டி போலீசில் வசந்தா புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகையை பறித்து சென்ற ஆசாமிகளை தேடி வந்தனர்.

இந்த நிலையில் வீரபாண்டி போலீசார் வீரபாண்டி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு மோட்டார் சைக்கிளில் 2 பேர் வந்து கொண்டிருந்தனர். அவர்களை சந்தேகத்தின் பேரில் போலீசார் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் திண்டுக்கல் மாவட்டம் கோடங்கிபட்டி சீலாம்பாடி மல்லிப்பாடி கிராமத்தை சேர்ந்த ராஜசேகர் (வயது 25) மற்றும் திருப்பூர் சாமுண்டிபுரம் ராஜீவ்நகர் பகுதியை சேர்ந்த ஜீவா (25) என தெரியவந்தது.

இவர்கள் 2 பேரும் சம்பவத்தன்று வசந்தா அணிந்து இருந்த நகையை பறித்து சென்றதும், திருப்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வழிப்பறியில் ஈடுபட்டதாகவும், மேலும் வாகனங்களை திருடியதாகவும் ஒப்புக்கொண்டனர்.

இதையடுத்து இவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 3 பவுன்நகை மற்றும் இரு சக்கர வாகனம் ஒன்றையும் பறிமுதல் செய்தனர். 
Tags:    

Similar News