செய்திகள்

பழனி அருகே ஒர்க்ஷாப்பில் தீ பிடித்து 20 பைக்குகள் சேதம்

Published On 2018-09-05 11:04 GMT   |   Update On 2018-09-05 11:04 GMT
பழனி அருகே ஒர்க்ஷாப்பில் தீ பிடித்து 20 பைக்குகள் எரிந்து சேதமானது. இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பழனி:

பழனி - கோவை ரோடு காமராஜ் நகர் அருகில் பாலாஜி மில் பகுதியில் சரவணன் என்பவருக்கு சொந்தமான ஒர்க்ஷாப் உள்ளது. நேற்று இரவு சரவணன் மற்றும் ஊழியர்கள் பணியை முடித்து விட்டு சென்று விட்டனர்.

நள்ளிரவில் கடையில் திடீரென தீ பிடித்தது. சிறிது நேரத்தில் தீ மளமளவென பரவி அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. உடனே அருகில் இருந்தவர்கள் தீயை அணைக்க முயன்றனர்.

முடியாமல் போகவே பழனி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்து சுமார் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இருந்த போதும் ஒர்க்ஷாப்பில் பழுது நீக்கத்திற்காக வைக்கப்பட்டு இருந்த 20 மோட்டார் சைக்கிள்கள் முற்றிலும் எரிந்து நாசமானது.

ஒர்க்ஷாப் அருகே அதிக அளவு கடைகள் மற்றும் குடியிருப்புகள் உள்ளது. தீ உடனடியாக அணைக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. மின் கசிவு காரணமாக இந்த தீவிபத்து நடந்திருக்கலாம் என தெரிய வந்துள்ளது.

இது குறித்து சரவணன் கொடுத்த புகாரின் பேரில் பழனி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News