செய்திகள்
கொலை செய்யப்பட்ட அய்யாவு ரத்தவெள்ளத்தில் பிணமாக கிடக்கும் காட்சி.

பழனி அருகே பிரபல ரவுடி அடித்து கொலை

Published On 2018-09-05 08:07 GMT   |   Update On 2018-09-05 08:07 GMT
பழனி அருகே பிரபல ரவுடி அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் கொலையில் ஈடுபட்ட ஆறுமுகத்தை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
பழனி:

பழனி தெரசம்மாள் காலனியை சேர்ந்த வெள்ளைச்சாமி மகன் அய்யாவு(வயது33). பிரபல ரவுடி. இவர் மீது கொலை, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளது. அதேபகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவர்கள் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

நேற்றிரவு அய்யாவு சாமி தியேட்டர் முன்புறம் நின்றுகொண்டிருந்தார். அப்போது ஆறுமுகம் தனது நண்பர்களுடன் அங்கு வந்தார். அப்போது அவர்கள் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.

இதில் ஆத்திரமடைந்த ஆறுமுகம் அய்யாவுவை தாக்கி கீழே தள்ளினார். பின்னர் அருகில் இருந்த கல்லை அவர் தலையில் போட்டார். இதில் சம்பவ இடத்திலேயே அய்யாவு துடிதுடித்து உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த பழனி டவுன் போலீசார் விரைந்து வந்து கொலை செய்யப்பட்ட அய்யாவு உடலை மீட்டு பழனி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர்.

மேலும் கொலையில் ஈடுபட்ட ஆறுமுகத்தை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தில் தொடர்புடைய மேலும் 2 பேரை தேடி வருகின்றனர்.



Tags:    

Similar News