செய்திகள்

நல்ல திட்டங்கள் அமைய கோர்ட்டு தீர்ப்பு வழங்கி இருக்கிறது - தம்பித்துரை

Published On 2018-09-05 06:15 GMT   |   Update On 2018-09-05 06:15 GMT
8 வழிச்சாலை திட்ட தொடர்பான வழக்கில் கோர்ட்டு நல்ல தீர்ப்பு வழங்கி இருக்கிறது என்று தம்பித்துரை நிருபர்களிடம் அளித்த பேட்டியில் கூறியுள்ளார். #GreenWayRoad #ThambiDurai

ஆலந்தூர்:

பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

சேலம்-சென்னை 8 வழிச்சாலை திட்டத்தில் நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான வழக்கில் தமிழ் நாட்டில் நல்ல திட்டங்கள் அமைய நீதி துறை தீர்ப்பு வழங்கி இருக்கிறது.

மு.க.அழகிரி பேரணி நடத்த அவருக்கு உரிமை இருக்கிறது. ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம்.

தமிழிசை - மாணவி சோபியா வாக்குவாதம் சம்பவம் பற்றி முழுமையாக எனக்கு தெரியாது. எனவே அதுபற்றி கருத்து கூற முடியாது.

இவ்வாறு அவர் கூறினார். #GreenWayRoad #ThambiDurai

Tags:    

Similar News