செய்திகள்

ஜிப்மர் ஆஸ்பத்திரி வளாகத்தில் பிறந்து 2 நாளே ஆன குழந்தை முட்புதரில் வீச்சு

Published On 2018-09-04 16:44 GMT   |   Update On 2018-09-04 16:44 GMT
ஜிப்மர் ஆஸ்பத்திரி வளாகத்தில் பிறந்து 2 நாளே ஆன குழந்தை முட்புதரில் வீசி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி:

புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் நர்சுகள் தங்கி இருக்கும் விடுதி அருகே முட்புதரில் இருந்து நேற்று இரவு குழந்தையின் அழுகுரல் வந்தது.

இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவலாளி அங்கு சென்று பார்த்தார். அப்போது பிறந்து 2 நாட்களே ஆன பெண் சிசு உயிருடன் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர் அந்த குழந்தையை மீட்டு ஜிப்மர் ஆஸ்பத்திரியில் ஒப்படைத்தார். அங்கு குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து கோரிமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து குழந்தையை வீசி சென்றவர்கள் யார்? கள்ளக் காதலில் பிறந்ததால் குழந்தையை வீசி சென்றார்களா? அல்லது பெண் குழந்தையாக இருந்ததால் வீசி சென்றார்களா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News