செய்திகள்

கே.ஆர். தோப்பூர் அருகே தொழிலாளி விபத்தில் பலி

Published On 2018-09-03 12:15 GMT   |   Update On 2018-09-03 12:15 GMT
கே.ஆர்.தோப்பூரில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்துக்கு சென்று வழிபட்டு விட்டு வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்த தொழிலாளி அடையாளம் தெரியாத வாகனம் மோதி பலியானார்.
தாரமங்கலம்:

சேலம் கே.ஆர். தோப்பூர் அருகே உள்ள செட்டி மாங்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 48). கூலி தொழிலாளி.

இவர் கே.ஆர்.தோப்பூரில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்துக்கு சென்று வழிபட்டு விட்டு வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக வந்த ஒரு வாகனம் அவர் மீது மோதி விட்டு, அங்கு நிற்காமல் சென்று விட்டது. பலத்த காயம் அடைந்த பழனிசாமியை பொதுமக்கள் சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் போகும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

இந்த சம்பவம் குறித்து தாரமங்கலம் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் ராஜூ வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்தி விட்டு சென்ற அடையாளம் தெரியாத வாகனத்தை தேடி வருகிறார்.

பலியான பழனிசாமிக்கு ராசாத்தி என்ற மனைவியும், சாமுவேல், என்ற மகனும் தாரணி என்ற மகளும் உள்ளனர். #tamilnews

Tags:    

Similar News