செய்திகள்

திசையன்விளையில் செல்போன் கடையில் திருட்டு

Published On 2018-09-03 12:02 GMT   |   Update On 2018-09-03 12:02 GMT
திசையன்விளை மெயில் பஜாரில் உள்ள செல்போன் கடையில் 90 ஆயிரம் மதிப்புள்ள செல்போன் திருடப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திசையன்விளை:

திசையன்விளை மெயின் பஜாரில் உள்ள செல்போன் கடையில் தூத்தக்குடி மாவட்டம் தெற்கு பேய்க்குளம் ஸ்ரீ வெங்கடேஸ்வரபுரத்தை சேர்ந்த சின்னத்துரை மகன் அருண்பாண்டி (வயது 27) ஊழியராக வேலை செய்து வந்தார்.

அந்த கடையில் உள்ள செல்போன்களை ஸ்டாக் செக் செய்யும் போது குறிப்பிட்ட மாடல் செல்போன்கள் மாயமானது தெரியவந்தது. அதன் மதிப்பு ஒரு லட்சத்து 90 ஆயிரம் என கூறப்படுகிறது. மாயமான செல்போன்களை கடை ஊழியார் அருண்பாண்டி திருடி சென்றுவிட்டதாக கடை மேலாளர் செல்வராஜா திசையன்விளை போலீசில் புகார் செய்தார்.

போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகேந்திரன் வழக்குப்பதிவு செய்து அருண்பாண்டியை கைது செய்தார். அவரிடம் இருந்து ஒரு லட்சம் மதிப்பிலான செல்போன்களை போலீசார் மீட்டனர். அருண்பாண்டியை சிறையில் அடைத்தனர். #tamilnews
Tags:    

Similar News