செய்திகள்
ஹெட்போனில் பாட்டு கேட்டு கொண்டு தண்டவாளத்தில் நடந்து சென்ற வாலிபர் ரெயில் மோதி பலி
கோவை நஞ்சுண்டாபுரம் பாலம் அருகே தண்டவாளத்தில் நடந்து சென்ற வாலிபர் ரெயிலில் அடிப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
கோவை:
கோவை நஞ்சுண்டாபுரம் பாலம் அருகே தண்டவாளத்தில் 35 வயது மதிக்க வாலிபர் காதில் ஹெட்போனை மாட்டி பாட்டு கேட்டுக்கொண்டே நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த ரெயில் என்ஜின் டிரைவர் வாலிபர் நடந்து செல்வதை பார்த்து ஒலி எழுப்பினார். ஆனால் அந்த வாலிபர் பாட்டு கேட்டுக்கொண்டே நடந்து சென்றதால் சத்தம் கேட்கவில்லை. கண் இமைக்கும் நேரத்தில ரெயில் வாலிபர் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே அந்த வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சப்-இன்ஸ்பெக்டர் ஏசு தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் ரெயிலில் அடிபட்டு இறந்த வாலிபரின் உடலை கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ரெயில் மோதி இறந்த வாலிபர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
கோவை நஞ்சுண்டாபுரம் பாலம் அருகே தண்டவாளத்தில் 35 வயது மதிக்க வாலிபர் காதில் ஹெட்போனை மாட்டி பாட்டு கேட்டுக்கொண்டே நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த ரெயில் என்ஜின் டிரைவர் வாலிபர் நடந்து செல்வதை பார்த்து ஒலி எழுப்பினார். ஆனால் அந்த வாலிபர் பாட்டு கேட்டுக்கொண்டே நடந்து சென்றதால் சத்தம் கேட்கவில்லை. கண் இமைக்கும் நேரத்தில ரெயில் வாலிபர் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே அந்த வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சப்-இன்ஸ்பெக்டர் ஏசு தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் ரெயிலில் அடிபட்டு இறந்த வாலிபரின் உடலை கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ரெயில் மோதி இறந்த வாலிபர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews