செய்திகள்

ராமநாதபுரத்தில் அரசு பஸ் கண்டக்டர் வீட்டில் கொள்ளை

Published On 2018-09-03 10:10 GMT   |   Update On 2018-09-03 10:10 GMT
அரசு பஸ் கண்டக்டர் வீட்டின் கதவை உடைத்து பணம்-பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

ராமநாதபுரம்:

ராமநாதபுரம் செந்தமிழ் நகரைச் சேர்ந்தவர் சேது மாதவன், அரசு பஸ் கண்டக்டர்.இவர் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் வெளியூர் சென்றார்.

இன்று காலை அவர்கள் வீடு திரும்பினர். அப்போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து கேணிக்கரை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பீரோவில் இருந்த வெள்ளி குத்து விளக்கு, ரூ.25 ஆயிரம் மற்றும் பொருட்கள் கொள்ளைபோய் இருப்பதாக சேதுமாதவன் தெரிவித்தார்.

வீட்டில் ஆட்கள் இல்லாததை அறிந்து கொள்ளையர்கள் கைவரிசை காட்டி உள்ளனர்.

கடந்த சில நாட்களாகவே ராமநாதபுரம் பகுதிகளில் பூட்டிய வீடுகளை குறி வைத்து கொள்ளை சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.

இதன் காரணமாக பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். போலீசார் விரைந்து செயல்பட்டு கொள்ளையர்களை கைது செய்ய வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News