செய்திகள்

வாடிப்பட்டியில் பாலிடெக்னிக் மாணவர் வி‌ஷம் குடித்து தற்கொலை

Published On 2018-09-03 09:53 GMT   |   Update On 2018-09-03 09:53 GMT
வாடிப்பட்டியில் பாலிடெக்னிக் மாணவர் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதால் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாடிப்பட்டி:

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள தனிச்சியம் பகவதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அமுதகண்ணன். இவரது மகன் அழகு (வயது 19). இவர் அதே பகுதியில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வந்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு அழகு யாருடனும் பேசாமல், விரக்தியுடன் இருந்து வந்தார். நேற்று இரவு வீட்டின் தனியறையில் இருந்த அவர் வி‌ஷம் குடித்து மயங்கி கிடந்தார்.

குடும்பத்தினர் அவரை மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிசிச்சை பலனின்றி இன்று காலை அழகு இறந்தார்.

இதுகுறித்து வாடிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து அழகு எதற்காக வி‌ஷம் குடித்தார்? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News