செய்திகள்

மரங்களை வெட்டி கடத்தியதாக கைதான காண்டிராக்டர் உள்பட 2 பேர் சேலம் சிறையில் அடைப்பு

Published On 2018-09-03 06:04 GMT   |   Update On 2018-09-03 06:04 GMT
தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகே மரங்களை வெட்டி கடத்தியதாக கைதான காண்டிராக்டர் உள்பட 2 பேர் சேலம் சிறையில் அடைக்கப்பட்டனர்.
தருமபுரி:

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகே கோம்பூர் வனப்பகுதியில் காற்றில் சாய்ந்த 4 மரங்களை வெட்ட டெண்டர் எடுத்தவர் 121 மரங்களை வெட்டி கடத்தியது அதிகாரிகள் நடத்திய ஆய்வில் தெரியவந்தது.

இது குறித்து பாப்பிரெட்டிப்பட்டி தாசில்தார் கற்பகவடிவு, பாப்பிரெட்டிப்பட்டி போலீசில் புகார் செய்தார்.

இந்த புகாரின் பேரில் 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதில் ஊர் கவுண்டரும், மரங்களை வெட்ட டெண்டர் எடுத்த காண்டிராக்டருமான கோம்பூரை சேர்ந்த ஆண்டி (வயது 64), மணிவண்ணன் (50) ஆகிய 2 பேர் உடனடியாக கைது செய்யப்பட்டனர். அவர்கள் பாப்பிரெட்டிப்பட்டி கோர்ட்டில் ஆஜர் செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். மற்ற 3 பேரை போலீசார் தேடி வருகிறார்கள். #tamilnews
Tags:    

Similar News