செய்திகள்

போடியில் லாட்ஜில் பிணமாக கிடந்த நகராட்சி ஊழியர்

Published On 2018-09-01 11:17 GMT   |   Update On 2018-09-01 11:17 GMT
போடியில் மர்மமான முறையில் இறந்த முன்னாள் நகராட்சி ஊழியர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

போடி:

போடி சுப்புராஜ்நகரை சேர்ந்தவர் சுப்புராஜ்(வயது73). ஓய்வுபெற்ற நகராட்சி ஊழியர். நேற்று காலை நடைபயிற்சி செல்வதாக வீட்டில் கூறிச்சென்றுள்ளார். அதன்பின்பு வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது மகன் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடிபார்த்தார். எங்கும் கிடைக்கவில்லை.

இந்நிலையில் போடி நகர்பகுதியில் உள்ள லாட்ஜில் மர்மமான முறையில் முதியவர் இறந்துகிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

போடி டவுன் இன்ஸ்பெக்டர் சேகர் தலைமையில் சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்தனர். அங்கு லாட்ஜ் ஊழியர்களிடம் நடத்திய விசாரணையில் சுப்புராஜ் காலையில் அறை எடுத்து தங்கியதாகவும், ஆனால் அதன்பிறகு கதவு திறக்கப்படாமலேயே இருந்ததால் பூட்டை உடைத்து உள்ளே சென்றதாகவும் தெரிவித்தனர். அங்கு சுப்புராஜ் சேரில் அமர்ந்தபடி பிணமாக கிடந்தார். அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் சுப்புராஜ் எவ்வாறு இறந்தார் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News