பழனி அருகே தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட பழனி டிரைவர் கைது
வடமதுரை:
பழனி அருகே உள்ள கலையம்புத்தூரைச் சேர்ந்த மாயவன் மகன் ராம கிருஷ்ணன் (வயது 34). டிரைவராக வேலை பார்த்து வந்தார். போதிய வருமானம் கிடைக்காததால் அவ்வப்போது திருட்டு மற்றும் வழிப்பறியில் ஈடுபட்டு வந்தார்.
வடமதுரை அருகே சந்தேகத்திற்கிடமாக சுற்றித் திரிந்த அவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தியதில் வழிப்பறியில் ஈடுபட்டதை ஒத்துக்கொண்டார்.
திண்டுக்கல் ஒய்.எம்.ஆர்.பட்டியைச் சேர்ந்த இருதயராஜ் என்பவர் கஸ்தூரி நாயக்கன்பட்டி என்ற இடத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற போது தீப்பெட்டி கேட்பது போல் வழி மறித்து அவர் அணிந்திருந்த 3 பவுன் தங்க செயினை பறித்தார்.
மேலும் காட்டுப் பட்டியைச் சேர்ந்த ஒரு பெண்ணிடம் 5 பவுன் நகையை பறித்ததும் தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் அவரிடம் இருந்து 8 பவுன் நகையை பறிமுதல் செய்தனர். ராமகிருஷ்ணனை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.