திருமுல்லைவாயலில் செல்போன் பேசியவர் கிணற்றில் தவறி விழுந்து பலி
திருநின்றவூர்:
திருமுல்லைவாயல் இந்திராநகரைச் சேர்ந்தவர் மணிகண்டன் (32). பெயிண்டர்.
நேற்று இரவு 9.30 மணி அளவில் மணிகண்டன் தனது வீட்டின் பின்புறம் உள்ள கிணற்றின் சுவரில் உட்கார்ந்து செல்போனில பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக கிணற்றுக்குள் தவறி விழுந்தார். சத்தம் கேட்டு அருகில் உள்ளவர்கள் அங்கு ஓடிவந்தனர்.
இதற்குள் அவர் தண்ணீரில் மூழ்கினார். இதுகுறித்து அம்பத்தூர் தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் இறங்கி மணிகண்டனை கிணற்றில் இருந்து வெளியே கொண்டு வந்தனர். இரவு 11 மணியளவில் அவர் அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அவரை பரிசோதித்த டாக்டர்கள் மணிகண்டன் உயிர் இழந்து விட்டதாக கூறினார்கள்.
இதுகுறித்து திருமுல்லைவாயல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இறந்த மணிகண்டனுக்கு மனைவியும், குழந்தைகளும் உள்ளனர்.
அவரது உடல் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் பரிசோதனை செய்யப்பட்டது. மணிகண்டன் உடலை கண்டு உறவினர்கள் கதறிய காட்சி பரிதாபமாக இருந்தது.