செய்திகள்

ஊத்துக்கோட்டையில் வருவாய் கிராம ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

Published On 2018-08-29 06:43 GMT   |   Update On 2018-08-29 06:43 GMT
தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கத்தினர், ஊத்துக்கோட்டை தாலுக்கா அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஊத்துக்கோட்டை:

வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். பழைய முறைப்படி ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கத்தினர், ஊத்துக்கோட்டை தாலுக்கா அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சங்க வட்ட தலைவர் அருள் தலைமை தாங்கினார். செயலாளர் ரகு, பொருளாளர் சங்கர், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கேசவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட இணைச் செயலாளர் பாஸ்கரன், வட்ட துணைச் செயலாளர் லாலாஜி, துணைத்தலைவர் கருணாகரன் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News