search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்"

    • சங்கங்களின் சாவிகளை காஞ்சிபுரம் மண்டல இணை பதிவாளர் ஜெயஸ்ரீயிடம் ஒப்படைத்தனர்.
    • நகை கடன் வழங்கும் பணி, உரம் பூச்சி மருந்து விநியோகம் என அனைத்து பணிகளும் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகத்தின் முன்பு, தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் நகர கூட்டுறவு கடன் சங்கங்களை சேர்ந்த 150க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட தலைவர் வாசுதேவன் தலைமை தாங்கினார். சங்கங்களுக்கு பயன்படாத உபகரணங்களை வாங்க வேண்டும் என கட்டாயப்படுத்தும் கூட்டுறவுத்துறை அதிகாரிகளை கண்டித்தும், திட்டம் கைவிடும் வரை அனைத்து பணியாளர்களும் வேலைக்கு செல்வதில்லை என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.

    இதைத்தொடர்ந்து சங்கங்களின் சாவிகளை காஞ்சிபுரம் மண்டல இணை பதிவாளர் ஜெயஸ்ரீயிடம் ஒப்படைத்தனர். இதனால் மாவட்டத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் நகர கூட்டுறவு கடன் சங்கங்கள் என 60 சங்கங்களும், 145 பணியாளர்களும் தொடர் விடுப்பில் செல்வதால் விவசாய கடன் வழங்கும் பணி, நகை கடன் வழங்கும் பணி, உரம் பூச்சி மருந்து விநியோகம் என அனைத்து பணிகளும் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    • மத்திய கூட்டுறவு வங்கி தலைமை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றதுது.
    • நகர மற்றும் தொடக்க நிலை வங்கிகள் ஆகியவற்றை முற்றிலும் கணினி மயமாக்கிட வேண்டும்.

    காஞ்சிபுரம்:

    தமிழ்நாட்டில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் நீண்ட கால நிலுவை கோரிக்கைகளுக்கு தீர்வு காணக்கோரி காஞ்சிபுரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர்கள் ஒருங்கிணைப்பு குழு சார்பில் காஞ்சிபுரத்தில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கி தலைமை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றதுது. ஒருங்கிணைப்பாளர்கள் கிருஷ்ணகுமார், சுப்பிரமணியன் ஆகியோர் தலைமை தாங்கினர்.

    இதில் மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர்கள், நகர கூட்டுறவு வங்கி மற்றும் தொடக்க வேளாண்மை ஊரக வளர்ச்சி வங்கி ஊழியர்கள் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    கூட்டுறவு சங்கங்களின் பதிவாளரை வலியுறுத்தி நடைபெற்ற இந்த போராட்டத்தில் கூட்டுறவு வங்கி ஊழியர்களின் ஊதிய உயர்வு கோரிக்கை 30 மாதத்திற்கும் மேலாக கால தாமதமாகி வருகிறது. இதனை உடனடியாக ஆணையாக வெளியிட வேண்டும் காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும். நகர மற்றும் தொடக்க நிலை வங்கிகள் ஆகியவற்றை முற்றிலும் கணினி மயமாக்கிட வேண்டும்.

    நகர கூட்டுறவு வங்கிகளில் ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வூதியம் வழங்க அமைக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகளின் படி கருணை ஓய்வூதியம் உடனடியாக வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றோர் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

    • தற்கொலை செய்துகொண்ட நவீன்சத்ருவின் மனைவி கொடுத்த புகாரின் பேரில் ராமேசுவரம் கோவில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • கோவில் இணை ஆணைய சிவராம் குமார் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    ராமேசுவரம்:

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சுப்புராஜ்-மனோ ரஞ்சிதம் தம்பதியின் மகன் நவீன்சத்ரு (வயது 36). இவர் கடந்த பிப்ரவரி மாதம் திருக்கோவில் பணிக்கு புதியதாக தேர்வு செய்யப்பட்ட 66 பணியாளர்களில் இவரும் ஒருவர் ஆவார். இதையடுத்து அவர் ராமேசுவரம் ராமநாத சுவாமி கோவிலில் பணியாளராக சேர்ந்தார்.

    இவர் கடந்த பல மாதங்களாக கோவிலில் பணியாற்றி வந்தார். இவர் ராமேசுவரம் இரட்டை பிள்ளையார் கோவிலில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்து வேலைக்கு சென்று வந்தார். இதற்கிடையே உயர் அதிகாரிகள் கோவிலின் விதிமுறைக்கு மாறாக கூடுதல் நேரம் பணி வாங்கியதாகவும், அதற்காக தொடர்ந்து வற்புறுத்தி வந்ததால் பெரும் மன உளைச்சலில் இருந்ததாகவும் குடும்பத்தினரிடம் அடிக்கடி தெரிவித்து வந்துள்ளார்.

    தொடர்ந்து தனக்கு பணியில் நீடிக்க விருப்பம் இல்லை என்றும் கூறியுள்ளார். இருந்தபோதிலும் அவரது குடும்பத்தினர் தைரியம் கூறி வந்துள்ளனர்.

    இந்த நிலையில் ராமேசுவரத்தில் நேற்று இரவு தான் தங்கியிருந்த வீட்டில் நவீன்சத்ரு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் அங்கு சென்று அவரது உடலை கைப்பற்றி ராமேசுவரம் அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அதன் பின்னர் அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்து வரவழைத்தனர்.

    இதுதொடர்பாக தற்கொலை செய்துகொண்ட நவீன்சத்ருவின் மனைவி கொடுத்த புகாரின் பேரில் ராமேசுவரம் கோவில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே கோவில் ஆய்வாளர் பிரபாகரன் பணியாளர்களுக்கு கடும் மன உளைச்சலை ஏற்படுத்தி வருவதை கண்டித்தும் அவருடைய டார்ச்சரால் இன்று ஒரு பணியாளர் இறந்துவிட்டார் என்றும் கூறினர்.

    மேலும் அவரை கைது செய்ய கோரி புதியதாக பணிக்கு சேர்ந்த பணியாளர்கள் ராமநாத சுவாமி முன்பு அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பின்னர் ராமேசுவரம் தாசில்தார் அப்துல் ஜபார் மற்றும் துணை போலீஸ் சூப்பிரண்டு உமாதேவி ஆகியோர் விரைந்து வந்து பணியாளர்களிடம் சமரசம் பேசி நடத்தி அவர்களை கோவில் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றனர்.

    அங்கு கோவில் இணை ஆணைய சிவராம் குமார் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தினர். அவர் பிரபாகரன் மீது நடவடிக்கை எடுப்பதாகவும், பணியாளர்களின் பணிச்சுமைகளை ஆராய்ந்து சீர் செய்ய நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதி அளித்தார். அதன் பின்னர் பணியாளர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு சென்றனர்.

    • சங்க தலைவர் சகாதேவன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.,
    • மனித உரிமை மீறல்களை ஐ நா சபை விசாரிக்க வேண்டும்.

    மாமல்லபுரம்:

    கல்பாக்கம் அம்பேத்கர் திடலில் கல்பாக்கம் அணுசக்திதுறை எஸ்.சி, எஸ்.டி ஊழியர் சங்கம் சார்பில், மணிப்பூர் வன்முறை சம்பவத்தை கண்டித்து, சங்க தலைவர் சகாதேவன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மணிப்பூர் வன்முறைகளை கண்டும் காணாமல் இருக்கும் பா.ஜ.க மத்திய அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பியவாறு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    கலவரத்தில் பெண்களை நிர்வானமாக்கி மானபங்க படுத்திய குற்றவாளிகள் மீது அதிகபட்ச தண்டனையாக தூக்குத் தண்டனை வழங்க வேண்டும் என்றும், இந்த மனித உரிமை மீறல்களை ஐ நா சபை விசாரிக்க வேண்டும். என்றும் ஆர்ப்பாட்டத்தில் தீர்மானம் கொண்டு வந்தனர்.

    • பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தல்
    • 20-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டையில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில், முதல் அமைச்சரின் காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு ஊழியர்களை கொண்டு நிறைவேற்றிட வேண்டும், காலிப்பணியிடங்களை போர்க்கால அடிப்படையில் உடனடியாக நிரப்ப வேண்டும், ஓய்வு பெறும் வயதை 60 -ல் இருந்து 62-ஆக உயர்த்திட வேண்டும், என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் ஜெயராமன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் மலர் முன்னிலை வகித்தார்.

    ஓய்வூதிய சங்க மாவட்ட செயலாளர் ஜெகதீசன் வாழ்த்துரை வழங்கினார். ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மாநில செயலாளர் ரவி கலந்து கொண்டு பேசினார்.

    ஆர்பாட்டத்தில் ஒன்றிய தலைவர் பிரவினா, ஒன்றிய செயலாளர் ராஜசேகர் உள்பட 20-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் தமிழ்செல்வி நன்றி கூறினார்.

    • அரசின் காலை சிற்றுண்டி திட்டத்தை தனியாருக்கு வழங்கக் கூடாது. சத்துணவு ஊழியர்களுக்கே வழங்க வேண்டும்.
    • சங்க நிர்வாகிகள் மற்றும் சத்துணவு ஊழியர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    நத்தம்:

    திண்டுக்கல் மாவட்டம் நத்தம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வட்டார தலைவர் ராமநாதன் தலைமை தாங்கினார். வட்டார செயலாளர் கந்தசாமி, மாவட்ட இணைச் செயலாளர் பாண்டிச்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஆர்ப்பாட்டத்தில் அரசின் காலை சிற்றுண்டி திட்டத்தை தனியாருக்கு வழங்கக் கூடாது. சத்துணவு ஊழியர்களுக்கே வழங்க வேண்டும் என வலியுறுத்தி பல்வேறு கோஷங்கள் எழுப்பப்பட்டது. முன்னாள் தலைவர் குப்பான் உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் மற்றும் சத்துணவு ஊழியர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுந்தரி நன்றி கூறினார்.

    • ஆற்காடு வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு நடந்தது
    • பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்

    ஆற்காடு:

    ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு ஒன்றிய, தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இதில் முதல்- அமைச்சரின் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரியும், காலமுறை ஊதியம், குடும்ப நல ஓய்வூதியம், பணிக்கொடை ரூ.5 லட்சம் வழங்க கோரியும், காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப கோரியும், மானியத்தை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

    • காலாவதியான சுங்க சாவடிகளை மூடக்கோரி நடந்தது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    வேலூர்:

    வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

    ஆர்ப்பாட்டத்திற்கு சாலை போக்குவரத்து சங்க மாவட்ட தலைவர் கேசவன் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு மாவட்ட தலைவர் முரளி, பரசுராமன் மாவட்ட துணை தலைவர் ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    புதிய மோட்டார் வாகன சட்டத்தை கைவிட வேண்டும் ஆன்லைன் அபராதத்தை ரத்து செய்ய வேண்டும் காலாவதியான சுங்க சாவடிகளை மூட வேண்டும் அடிக்கடி சுங்கச்சாவடி கட்டணத்தை உயர்த்துவதை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் பிரபாகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • 1993-ல் பணியில் சேர்ந்த அங்கன்வாடி ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்கிட வேண்டும்.

    மகுடஞ்சாவடி:

    சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 1993-ல் பணியில் சேர்ந்த அங்கன்வாடி ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்கிட வேண்டும், சிலிண்டர் தொகையை பில்லில் உள்ள முழு தொகையையும் வழங்க வேண்டும், தமிழக முழுவதும் காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான அங்கன்வாடி பணியாளர்கள் கலந்துகொண்டனர்.

    • ரெயில்வே துறை தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்பு
    • காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வலியுறுத்தல்

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் உள்ள ஆர்ஓ எச் ஷெட் வளாகத்தில் அகில இந்திய எஸ்சி எஸ்டி ரெயில்வே சங்கத்தினர் மத்திய அரசை கண்டித்து கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஜோலார்பேட்டை கிளை நிர்வாகி எஸ் சந்திரகாசி தலைமை தாங்கினார். மேலும் இதில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்கள் பெண்கள் என ரெயில்வே தொழிலாளர்கள் கலந்து கொண்டு ரெயில்வே துறையை தனியார் மயமாக்குவதை கைவிட வேண்டும்.

    மேலும் ரெயில்வே நிர்வாகம் ஆட்குறைப்பு பணியை மேற்கொண்டு வருகிறது.

    இதனைத் தவிர்த்து காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆட்குறைப்பு நடவடிக்கையை மத்திய அரசு கைவிட வேண்டும்.

    தொழிலாளரின் உரிமையை பறிக்காதே என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    • சத்துணவு ஊழியர்க ளுக்கு குடும்ப பாதுகாப்பு டன் கூடிய சட்டப்பூர்வ ஓய்வூதியம் ரூ.6,750 வழங்க வேண்டும்.
    • ஆர்ப்பாட்டத்தில் 80-க்கும் மேற்பட்ட சத்துணவு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

    அரவேணு,

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி ஊராட்சி ஒன்றிய  அலுவலகம் முன்பு சத்துணவு சங்கம் சார்பில்

    ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் கோத்தகிரி வட்டார தலைவர் சசிகலா தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் செல்லதுரை முன்னிலை வகித்தார். செயலாளர் ராமு வரவேற்றார். பின்னர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட சத்துணவு ஊழியர்கள் கூறியதாவது:-

    சத்துணவு ஊழியர்க ளுக்கு குடும்ப பாதுகாப்பு டன் கூடிய சட்டப்பூர்வ ஓய்வூதியம் ரூ.6,750 வழங்க

    வேண்டும். காலி பணியி டங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். ஓய்வு பெற்றவர்களுக்கு வழங்க வேண்டிய நிலு வைத் தொகை மற்றும் பணப்பலன்களை உடனடி யாக வழங்க வேண்டும். மருத்துவ காப்பீட்டு அட்டை

    மற்றும் உணவு மானி யத்தை மாதம் தோறும் 5-ந் தேதிக்குள் வழங்க

    வேண்டும். காலிப்பணியி டங்களில் சத்துணவு ஊழியர்களுக்கு 50 சத வீதம் ஒதுக்கீடு செய்து பதவி உயர்வு வழங்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியு றுத்தி கோஷங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் 80-க்கும் மேற்பட்ட சத்துணவு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

    • உயர் அதிகாரிகளை கண்டித்து நடந்தது
    • ஏராளமனோர் கலந்து கொண்டனர்

    போளூர்:

    செங்கல்பட்டு மாவட்டம் காட்டான் குளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக மண்டல துணை வட்டார வளர்ச்சி அதிகாரி பார்த்திபன் பணி சுமை காரணமாக விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    இது சம்பந்தமாக உயர் அதிகாரிகளை கண்டித்து போளூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நேற்று மாலை ஆணையாளர் பரணிதரன் தலைமையில் வட்டார வளர்ச்சி அதிகாரி பாபு மேலாளர் அருள் உள்பட 30 ஊழியர்கள் ஆர்ப்பா ட்டத்தில் ஈடுப ட்டனர்.

    ×