செய்திகள்
திருவள்ளூர் அருகே கார் மோதி தொழிலாளி பலி
திருவள்ளூர் அருகே கார் மோதி தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #accident
திருவள்ளூர்:
திருவள்ளூரை அடுத்த புல்லரம் பாக்கத்தை சேர்ந்தவர் லட்சுமிபதி வயது 55). டீ மாஸ்டர். நேற்று இரவு அவர் வேலை முடிந்து திருப்பாச்சூரில் இருந்து புல்லரம் பாக்கத்துக்கு மோட்டார் சைக்கிளில் வந்தார்.
டோல்கேட் அருகே வந்த போது பின்னால் வந்த கார் திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட லட்சுமிபதி சம்பவ இடத்திலேயே பலியானார்.
இது குறித்து திருவள்ளூர் தாலுக்கா போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் ராகிக் குமாரி மற்றும் போலீசார் விரைந்து வந்து லட்சுமிபதி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்து நடந்ததும் காரை நிறுத்தி விட்டு டிரைவர் தப்பி ஓடி விட்டார். காரை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.