செய்திகள்

திருமங்கலம் அருகே அழுகிய நிலையில் ஆண் பிணம் கொலையா? - போலீசார் விசாரணை

Published On 2018-08-27 11:06 GMT   |   Update On 2018-08-27 11:06 GMT
திருமங்கலம் அருகே அழுகிய நிலையில் ஆண் பிணம் கொலையா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பேரையூர்:

திருமங்கலம் அருகே உள்ள டி.புதுப்பட்டியில் ஆயிரம் கண்ணுடையாள் கோவில் உள்ளது. ராஜபாளையம்- திருமங்கலம் ரோட்டில் அமைந்துள்ள இந்த கோவில் அருகில் சிறிய பாலம் உள்ளது.

இந்த பாலத்தின் அடியில் துர்நாற்றம் வீசியது. இது குறித்து அப்பகுதி மக்கள் திருமங்கலம் தாலுகா போலீசுக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடம் வந்த போலீசார் அந்த பகுதியில் பார்த்தபோது 40 வயது மதிக்கத்தக்க ஆண் உடல் அழுகிய நிலையில் கிடந்தது.

உடனே போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அழுகிய நிலையில் இருந்ததால் இறந்தவர் யார்? என்பது குறித்து அடையாளம் காண்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

பிணமாக கிடந்தவர் கொலை செய்யப்பட்டு பாலத்தின் அடியில் வீசப்பட்டு சென்றாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? பிணமாக கிடந்தவர் யார்? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News