செய்திகள்
பெசன்ட்நகர் கடற்கரையில் ஓய்வுபெற்ற டி.ஐ.ஜி. மனைவியிடம் நகை பறிப்பு
சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் ஓய்வுபெற்ற டி.ஐ.ஜி. மனைவியிடம் நகை பறித்து சென்ற மர்மநபர்கள் குறித்து போலீசார்விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை:
சென்னை பெசன்ட் நகர் பகுதியை சேர்ந்தவர் ஜி.கே.பிள்ளை. டி.ஐ.ஜி.யாக இருந்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி பொன்னாள்.
இவர் பெசன்ட் நகர் கடற்கரையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் அங்கு வந்தனர். அவர்கள் பொன்னாள் அணிந்திருந்த 6 பவுன் செயினை பறித்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டனர்.
இது குறித்து பொன்னாள் சாஸ்திரிநகர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.
சம்பவம் நடந்த இடத்தில் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அதில் கொள்ளையர்களின் உருவம் பதிவாகி உள்ளதா என்பது பற்றியும் போலீசார் ஆய்வு நடத்தி வருகிறார்கள்.
சென்னை பெசன்ட் நகர் பகுதியை சேர்ந்தவர் ஜி.கே.பிள்ளை. டி.ஐ.ஜி.யாக இருந்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி பொன்னாள்.
இவர் பெசன்ட் நகர் கடற்கரையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் அங்கு வந்தனர். அவர்கள் பொன்னாள் அணிந்திருந்த 6 பவுன் செயினை பறித்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டனர்.
இது குறித்து பொன்னாள் சாஸ்திரிநகர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.
சம்பவம் நடந்த இடத்தில் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அதில் கொள்ளையர்களின் உருவம் பதிவாகி உள்ளதா என்பது பற்றியும் போலீசார் ஆய்வு நடத்தி வருகிறார்கள்.