செய்திகள்
கூடலூர் அருகே குடும்ப பிரச்சினையில் பெண் மீது தாக்குதல்
கூடலூர் அருகே குடும்ப பிரச்சினையில் பெண்ணை தாக்கிய 2 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தேனி:
தேனி அருகே கூடலூர் கே.ஜி.பட்டி பி.வி.கே. தெருவைச் சேர்ந்தவர் ராஜா மனைவி அன்னபெருமாயி. (வயது 55). இவரது உறவினர் கலைவாணியை அதே பகுதியைச் சேர்ந்த சிவானந்தன் என்பவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர்.
குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் சிவானந்தன் அன்னபெருமாயி மீது ஆத்திரத்தில் இருந்தார். சம்பவத்தன்று அப்பகுதியில் நடந்து சென்ற அன்னபெருமாயியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். இது குறித்து கூடலூர் தெற்கு போலீசார் 2 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.