செய்திகள்

பல்லடம் அருகே பனியன் தொழிலாளி தற்கொலை

Published On 2018-08-26 11:45 GMT   |   Update On 2018-08-26 11:45 GMT
பல்லடம் அருகே பனியன் தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பல்லடம்:

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள பச்சாப்பாளையத்தை சேர்ந்தவர் நர்மதன் (33). பனியன் கம்பெனி தொழிலாளி.

இவருக்கும் சரண்யா என்ற பெண்ணுக்கும் கடந்த 10 வருடத்துக்கு முன் திருமணம் நடைபெற்றது. திருமணமான 6 மாதத்தில் சரண்யா பிரிந்து சென்று விட்டார்.

இதனால் நர்மதன் தனது தந்தை லோகநாதனுடன் வசித்து வந்தார். இந்த நிலையில் நர்மதனுக்கு குடிப்பழக்கம் ஏற்பட்டது. அவர் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார்.

இதனால் மன வேதனை அடைந்த நர்மதன் நேற்று இரவு வீட்டில் உள்ள மின் விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். வெளியே சென்று இருந்த நர்மதன் தந்தை லோகநாதன் மகன் தூக்கில் பிணமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இது குறித்து பல்லடம் போலீசுக்கு தவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நர்மதன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பல்லடம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News