செய்திகள்
ஆண்டிப்பட்டி அருகே கடைக்கு சென்ற இளம்பெண் மகளுடன் மாயம்
ஆண்டிப்பட்டி அருகே மகளுடன் மாயமான இளம்பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.
ஆண்டிப்பட்டி:
ஆண்டிப்பட்டியை சேர்ந்தவர் செல்வம் (வயது37). இவரது மனைவி சுகன்யா (26). இவர்களுக்கு கிருத்திகா (7), சுருதிகா (4) என 2 பெண் குழந்தைகள் உள்ளன.
சம்பவத்தன்று கிருத்தி காவுடன், சுகன்யா அருகில் உள்ள கடைக்கு செல்வதாக வீட்டில் கூறி சென்றார். ஆனால் இரவு வெகுநேரமாகியும் அவர்கள் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த செல்வம் நண்பர் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடி பார்த்தார்.
எங்கும் கிடைக்காததால் ராஜதானி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து மகளுடன் மாயமான இளம்பெண் கடத்தப்பட்டாரா? அல்லது வேறு ஏதும் பிரச்சினையில் வீட்டை விட்டு வெளியேறினாரா? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.