செய்திகள்

வேப்பனப்பள்ளியில் வாகனம் மோதி தொழிலாளி பலி

Published On 2018-08-21 16:08 GMT   |   Update On 2018-08-21 16:08 GMT
வேப்பனப்பள்ளியில் மோட்டார்சைக்கிள் மீது வாகனம் மோதி தொழிலாளி பலியானார். மற்றொருவர் படுகாயம் அடைந்தார்.
வேப்பனப்பள்ளி:

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே உள்ள யானைகால்தொட்டி பகுதியை சேர்ந்தவர் பசவராஜ் (வயது 47). தொழிலாளி. இவர் நேற்று வேப்பனப்பள்ளியில் இருந்து மோட்டார்சைக்கிளில் ஊருக்கு சென்று கொண்டிருந்தார். பின்னால் அலேகுந்தானி பகுதியை சேர்ந்த வரதராஜ், இவருடைய மனைவி ஜோதி, மகள் கீர்த்தனா (1½) ஆகியோர் ஒரு மோட்டார்சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர்.

இவர்கள் வேப்பனப்பள்ளி ராமன் ஏரி பகுதியில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சென்ற வாகனம் பசவராஜ், வரதராஜ் ஆகியோர் சென்ற மோட்டார்சைக்கிள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் தூக்கி வீசப்பட்ட பசவராஜ் தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

வரதராஜூக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. ஜோதி, குழந்தை கீர்த்தனா ஆகியோர் காயம் இன்றி தப்பினர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த வேப்பனப்பள்ளி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அறிவழகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் அவர்கள் காயம் அடைந்த வரதராஜனை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே விபத்தில் உயிரிழந்த பசவராஜின் உடலை பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
Tags:    

Similar News