செய்திகள்
திண்டுக்கல்லில் காதலன் ஏமாற்றியதால் விஷம் குடித்த இளம்பெண்
திண்டுக்கல்லில் காதலன் ஏமாற்றியதால் விஷம் குடித்த இளம்பெண் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் லயன் தெருவை சேர்ந்த ஜான் அலெக்சாண்டர் குளோரி அஸ்வின் (வயது21). இவர் ஆரோக்கியதாஸ் என்பவரை காதலித்து வந்தார்.
இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்திருந்த நிலையில் திடீரென ஆரோக்கியதாஸ் குளோரியை சந்திப்பதை தவிர்த்தார். மேலும் இனிமேல் தன்னிடம் பேச வேண்டாம் எனவும் கூறினார்.
இதனால் வேதனையடைந்த குளோரி விஷம் குடித்து திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நகர் மேற்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல் அருகில் உள்ள சிறுமலை அகஸ்தியர்புரத்தை சேர்ந்த கிருஷ்ணன் மகன் நாகபாண்டியன் (20). இவர் தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு பெற்றோரிடம் கூறி வந்தார். அதற்கு அவர்கள் இன்னும் சில மாதங்கள் கழித்து திருமணம் செய்து வைப்பதாக கூறினர்.
இதனால் வேதனையடைந்து விஷம் குடித்து வீட்டில் மயங்கி கிடந்தார். திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். திண்டுக்கல் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல் லயன் தெருவை சேர்ந்த ஜான் அலெக்சாண்டர் குளோரி அஸ்வின் (வயது21). இவர் ஆரோக்கியதாஸ் என்பவரை காதலித்து வந்தார்.
இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்திருந்த நிலையில் திடீரென ஆரோக்கியதாஸ் குளோரியை சந்திப்பதை தவிர்த்தார். மேலும் இனிமேல் தன்னிடம் பேச வேண்டாம் எனவும் கூறினார்.
இதனால் வேதனையடைந்த குளோரி விஷம் குடித்து திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நகர் மேற்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல் அருகில் உள்ள சிறுமலை அகஸ்தியர்புரத்தை சேர்ந்த கிருஷ்ணன் மகன் நாகபாண்டியன் (20). இவர் தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு பெற்றோரிடம் கூறி வந்தார். அதற்கு அவர்கள் இன்னும் சில மாதங்கள் கழித்து திருமணம் செய்து வைப்பதாக கூறினர்.
இதனால் வேதனையடைந்து விஷம் குடித்து வீட்டில் மயங்கி கிடந்தார். திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். திண்டுக்கல் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.