செய்திகள்

கோவையில் அரசு பஸ் மோதி பெண் பலி

Published On 2018-08-21 10:49 GMT   |   Update On 2018-08-21 10:49 GMT
கோவையில் இன்று அரசு பஸ் மோதிய விபத்தில் பெண் பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பீளமேடு:

கோவை சவுரிப்பாளையத்தை சேர்ந்தவர் புஷ்பநாதன். மில் ஊழியர்.இவரது மனைவி சகாயமேரி (54). இவர்கள் இன்று மதியம் அப்பகுதியில் உள்ள கண் ஆஸ்பத்திரிக்கு சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பி கொண்டு இருந்தனர்.

அவர்கள் பீளமேடு ஹோப் காலேஜ் அருகில் உள்ள சிக்னலை தாண்டி சென்று கொண்டிருந்தனர். அப்போது நிலை தடுமாறி மோட்டார் சைக்கிள் பின்புறம் இருந்த சகாய மேரி தவறி விழுந்தார்.

அந்த சமயத்தில் ஈரோட்டில் இருந்து கோவைக்கு அரசு பஸ் வந்தது. அந்த பஸ் சகாய மேரி மீது மோதியது. இதில் சம்பவ இடத்தில் அவர் பரிதாபமாக இறந்தார்.

தன் கண் முன் மனைவி பலியானதை கண்டு புஷ்பநாதன் கதறி அழுதார். தங்களுக்கு குழந்தை இல்லை என்றும் இதனால் மனைவியை குழந்தை போல் பாவித்து வந்தேன். அவரும் விபத்தில் பலியாகி விட்டாரே? என புஷ்பநாதன் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.

விபத்து குறித்து போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News