செய்திகள்

கல்லூரிகளில் செல்போனுக்கு தடை என்ற சர்ச்சைக்குள்ளான உத்தரவு வாபஸ்

Published On 2018-08-20 12:36 GMT   |   Update On 2018-08-20 12:36 GMT
தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளில் மாணவர்கள் செல்போன் கொண்டு வர தடை விதித்து உயர்கல்வித்துறை பிறப்பித்த உத்தரவு சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அந்த உத்தரவு வாபஸ் பெறப்பட்டுள்ளது. #TNColleges #MobileBan
சென்னை:

கல்லூரியில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு ஆடை கட்டுப்பாடு உள்பட பல்வேறு கட்டுப்பாடுகள் இருக்கிறது. சில கல்லூரிகள் இந்த கட்டுப்பாடுகளை கடுமையாக பின்பற்றி வருகின்றன.

இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் உள்பட அனைத்து கல்லூரிகளிலும் மாணவ-மாணவிகள் செல்போன் பயன்படுத்த தடை விதித்து, கல்லூரி கல்வித்துறை இயக்குனரகம் சமீபத்தில் உத்தரவு பிறப்பித்தது. 

செல்போனால் மாணவ- மாணவிகளின் கவனம் சிதறுகிறது. இதை தடுக்க இந்த முடிவை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது. ஏற்கனவே பள்ளிகளில் செல்போனுக்கு தடை இருக்கிறது. தற்போது கல்லூரி வளாகத்தில் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது.

இந்நிலையில், அரசின் இந்த முடிவுக்கு மாணவர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளதாலும், இந்த உத்தரவை நடைமுறைப்படுத்துவதில் பல சிக்கல்கள் இருப்பதாக கூறப்பட்டு தற்போது இந்த உத்தரவு வாபஸ் பெறப்பட்டுள்ளது. 
Tags:    

Similar News