செய்திகள்
திருப்பூர் அருகே மோட்டார் சைக்கிள் மோதி நடந்து சென்றவர் பலி
திருப்பூர் அருகே நடந்து சென்றவர் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் வாலிபர் பலியானார்.
திருப்பூர்:
திருப்பூர் முருகம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராஜாராம்(வயது 42). இவர் கொங்கு மெயின்ரோடு எம்.எஸ்.நகர் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அவர் அந்த பகுதியில் ரோட்டை கடந்து செல்ல முயன்ற போது அந்த வழியாக வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று ராஜாராம் மீது வேகமாக மோதிவிட்டு நிற்காமல் சென்றதாக தெரிகிறது.இதில் தூக்கி வீசப்பட்ட ராஜாராமுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர்.
ஆனால் அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த வடக்கு போலீசார், ராஜாராம் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற மோட்டார்சைக்கிளை ஓட்டி வந்தவரை தேடிவருகின்றனர்.
திருப்பூர் முருகம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராஜாராம்(வயது 42). இவர் கொங்கு மெயின்ரோடு எம்.எஸ்.நகர் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அவர் அந்த பகுதியில் ரோட்டை கடந்து செல்ல முயன்ற போது அந்த வழியாக வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று ராஜாராம் மீது வேகமாக மோதிவிட்டு நிற்காமல் சென்றதாக தெரிகிறது.இதில் தூக்கி வீசப்பட்ட ராஜாராமுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர்.
ஆனால் அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த வடக்கு போலீசார், ராஜாராம் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற மோட்டார்சைக்கிளை ஓட்டி வந்தவரை தேடிவருகின்றனர்.