செய்திகள்
சேரன்மகாதேவியில் விஷம் குடித்து மூதாட்டி தற்கொலை
சேரன்மகாதேவியில் விஷம் குடித்து மூதாட்டி சாவு
நெல்லை:
நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவியை சேர்ந்தவர் மாடசாமி. இவரது மனைவி ஆறுமுகத்தம்மாள் (வயது85). இவருக்கு கண் சரியாக தெரியாததால் ஆஸ்பத்தியில் கண் அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந்தது.
இந்த நிலையில் இவரை சரியாக கவனிக்காததால் மனமுடைந்த ஆறுமுகத்தம்மாள் விஷம் குடித்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் அவரை சேரன் மகாதேவி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலன் இல்லாமல் ஆறுமுகத்தம்மாள் இறந்தார்.
இதுகுறித்து சேரன்மகாதேவி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.