செய்திகள்

திசையன்விளையில் காதல் மனைவி பிரிந்து சென்றதால் வாலிபர் தற்கொலை

Published On 2018-08-14 11:07 GMT   |   Update On 2018-08-14 11:07 GMT
திசையன்விளையில் காதல் மனைவி பிரிந்து சென்றதால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திசையன்விளை:

திசையன்விளையை அடுத்த மணலிவிளை முத்தாரம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் இசக்கிமுத்து மகன் ராஜதுரை (வயது 24). மணலிவிளையில் பைக் சர்வீஸ் சென்டர் நடத்தி வந்தார். கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த கீர்த்தனா என்ற பெண்ணை காதல் திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் கணவன்- மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டிருக்கிறது. இதன் காரணமாக கணவரை விட்டு பிரிந்து சென்ற அவர், கணவருக்கு விவகாரத்து நோட்டீஸ் அனுப்பியதாக கூறப்படுகிறது. இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த ராஜதுரை வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது பற்றி அவரது அக்காள் ரேக்கா திசையன்விளை போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகேந்திரன் வழக்குப்பதிவு செய்து குடும்ப தகராறில்தான் ராஜதுரை தற்கொலை செய்தாரா? அல்லது வேறு எதுவும் காரணமா? என்று விசாரணை நடத்தி வருகிறார்.
Tags:    

Similar News