செய்திகள்

திருமங்கலம்-கப்பலூரில் வீட்டில் வைத்து மது விற்ற 3 பேர் கைது

Published On 2018-08-14 10:25 GMT   |   Update On 2018-08-14 10:25 GMT
திருமங்கலம்-கப்பலூரில் வீட்டில் வைத்து மது விற்ற 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பேரையூர்:

மதுரை மாவட்டத்தில் சட்டவிரோத மது விற்பனையை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். மது விலக்கு போலீசாரும் தீவிர ரோந்து சுற்றி வந்தனர்.

இந்த நிலையில் திருமங்கலம் நகர் போலீசார் கப்பலூர் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த போஸ் (வயது63) என்பவர் தனது வீட்டில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து போசை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 215 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

இதே போல் திருமங்கலம் எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்த கர்ணன் (49), மேல உரப்பனூரைச் சேர்ந்த முத்துப்பிள்ளை (48) ஆகியோரும் வீட்டில் மது வைத்து விற்பனை செய்ததாக கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து 83 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இவர்கள் 3 பேரும் தாங்கள் விற்பனை செய்த மதுவில் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் சில ரசாயனங்களை கலந்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.

Tags:    

Similar News