செய்திகள்

கிராம சபை கூட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்த தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் - திருநாவுக்கரசர் வலியுறுத்தல்

Published On 2018-08-14 09:44 GMT   |   Update On 2018-08-14 09:44 GMT
கிராம சபை கூட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்த தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். #Thirunavukkarasar

சென்னை:

தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தமிழகத்தில் உள்ள பஞ்சாயத்துகளில் நாளை நடைபெறும் கிராம சபை கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியினர் அனைவரும் பங்கேற்று விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்கிற தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

இந்த தீர்மானத்தின் நகலை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில் ஒப்படைக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். இதன் மூலம் கிராம சபைகளின் செயல் பாட்டை உறுதி செய்திடுவோம்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Tags:    

Similar News