செய்திகள்

செட்டிப்பாளையம் அருகே ஜவுளிக்கடை மேலாளர் வீட்டில் நகைகள் திருட்டு

Published On 2018-08-13 12:03 GMT   |   Update On 2018-08-13 12:03 GMT
செட்டிப்பாளையம் அருகே ஜவுளிக்கடை மேலாளர் வீட்டில் தங்க நகைகள் திருடிய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை:

கோவை செட்டிப்பாளையம் அருகே உள்ள சங்கமம் நகரை சேர்ந்தவர் சசிராஜ் (வயது 38). இவர் பிரபல ஜவுளிக்கடையில் விளம்பர மேலாளராக வேலை பார்த்து வருகிறார்.

நேற்று முன்தினம் இவர் தனது வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் பொள்ளாச்சியில் உள்ள சகோதரி வீட்டுக்கு சென்றார். நேற்று காலை வீட்டுக்கு திரும்பினார்.

அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து இருந்தது. அதிர்ச்சியடைந்த சசிராஜ் வீட்டின் உள்ளே சென்று பார்த்தார். அறையில் இருந்த பீரோவை திறந்த மர்மநபர்கள் அதில் இருந்த 17 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்றது தெரிய வந்தது.

இது குறித்து சசிராஜ் செட்டிப்பாளையம் போலீசில் புகார் செய்தார். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து வந்து சசிராஜிடம் விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் வந்து அங்கு பதிவாகி இருந்த மர்மநபர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர். இந்த திருட்டு குறித்து செட்டிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து 17 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்ற மர்மநபர்களை தேடி வருகிறார்கள்.

Tags:    

Similar News