கரிமேடு அருகே கடையை உடைத்து பணம் கொள்ளை
மதுரை:
மதுரை பெத்தானியாபுரம் பள்ளிக்கூட குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் சவுந்தர்ராஜன் (வயது45). இவர் பைபாஸ் சாலையில் பலசரக்கு கடை நடத்தி வருகிறார்.
நேற்று முன்தினம் இரவு வியாபாரம் முடிந்ததும் சவுந்தர்ராஜன் கடையை அடைத்து சென்றார். இன்று காலை வந்தபோது முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு சவுந்தர்ராஜன் அதிர்ச்சி அடைந்தார். கரிமேடு போலீசில் புகார் செய்த அவர், ரூ.30 ஆயிரம் கொள்ளைபோய் இருப்பதாக தெரிவித்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிந்தாமணி காமாட்சி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த ரவிச்சந்திரன் மனைவி லதாதேவி (45) கடந்த 11-ந்தேதி கீழவெளி வீதியில் உள்ள வங்கிக்குச் சென்றார். அங்கு ஏ.டி.எம்.மில் ரூ.48 ஆயிரம் எடுத்த அவர், வெளியே வந்ததும் திடீரென மயங்கி விழுந்தார்.
சிறிது நேரம் கழித்து கண் விழித்த லதாதேவி ரூ.48 ஆயிரம் மற்றும் ஏ.டி.எம். கார்டு திருட்டுபோனது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்த புகாரின் பேரில் திலகர்திடல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.