செய்திகள்

அமெரிக்காவில் சிகிச்சை பெறும் விஜயகாந்த் தெளிவாக பேசுகிறார்- பார்த்தசாரதி தகவல்

Published On 2018-08-05 15:25 GMT   |   Update On 2018-08-05 15:25 GMT
அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வரும் விஜயகாந்த் முன்பை விட இப்போது தெளிவாக பேசுகிறார் என்று கரூரில் நடந்த தேமுதிக நிர்வாகிகள் கூட்டத்தில் முன்னாள் எம்எல்ஏ பார்த்தசாரதி பேசினார். #dmdk #vijayakanth
கரூர்:

கரூர் மாவட்ட தே.மு.தி.க. நிர்வாகிகளுடனான ஆய்வு கூட்டம் கரூரில் நடந்தது. மாவட்ட அவை தலைவர் முத்து தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் கே.வி. தங்கவேல் வரவேற்று பேசினார். 

மாற்றுத்திறனாளி அணி செயலாளர் பவர்டெக்ஸ் கே.செல்வராஜ், நெசவாளர் அணி செயலாளர் ராமநாதன், தொழிற்சங்க பேரவை துணை தலைவர் இளங்கோவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு விருந்தினராக கட்சியின் துணை  செயலாளர் முன்னாள்  எம்.எல்.ஏ. பார்த்தசாரதி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

தமிழக மக்கள் அ.தி.மு.க- தி.மு.க. மீது வெறுப்பில் இருக்கிறார்கள். அரசியலுக்கு புதிதாக வரும் ரஜினி, கமலை பற்றியும்    பேசவில்லை. மாறாக தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் அமெரிக்காவில் இருந்து எப்போது வருவார் என்ற எதிர்பார்ப்பே மக்களிடம் உள்ளது. 

அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வரும் விஜயகாந்த் முன்பை விட இப்போது தெளிவாக பேசுகிறார். என்னிடம் அவ்வப்போது ஆய்வு கூட்டம் பற்றி கேட்டறிந்து வருகிறார். விஜயகாந்த் திரும்பி வரும்போது தமிழகத்தில் அ.தி.மு.க -தி.மு.க. இருக்காது. மக்கள் தே.மு.தி.க. பக்கம் வந்துவிட்டனர். எனவே ஒற்றுமையாக கட்சி பணி யாற்றுங்கள். 

இவ்வாறு அவர் பேசினார். 

கூட்டத்தில் மாவட்ட பொருளாளர் அரிவின்ஸ், மாவட்ட துணை செயலாளர்கள் விஸ்வநாதன், சோமூர் ரவி, முன்னாள் துணை செயலாளர் குமார், நவநீதன், நகர செயலாளர் காந்தி, ஒன்றிய செயலாளர்கள் சிவம் ராஜேந்திரன், ஜெயக்குமார், கேப்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர். #dmdk #vijayakanth
Tags:    

Similar News