செய்திகள்

காஞ்சீபுரம் - திருவள்ளூர் மாவட்டத்தில் பரவலாக மழை

Published On 2018-08-05 09:45 GMT   |   Update On 2018-08-05 09:45 GMT
காஞ்சீபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டத்திலும் பரவலாக மழை பெய்தது.
திருவள்ளூர்:

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக மாலை நேரங்களில் விட்டு விட்டு லேசான மழை பெய்து வருகிறது. நேற்று மாலை திடீரென பலத்த மழை கொட்டியது. இரவு வரை மழை நீடித்தது.

இதேபோல காஞ்சீபுரம்- திருவள்ளூர் மாவட்டத்திலும் பரவலாக நல்ல மழை பெய்தது. அதிகபட்சமாக செங்குன்றத்தில் 31.60 மி.மீட்டர் மழை பதிவானது.

காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று மாலை முதல் இரவு வரை பரவலாக நல்ல மழை பெய்தது. கடந்த சில நாட்களாக கடும் வெயிலில் தவித்த மக்களுக்கு இந்த திடீர் மழை மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
Tags:    

Similar News