செய்திகள்

திருத்துறைப்பூண்டி அருகே வீட்டுக்குள் லாரி புகுந்து தொழிலாளி பலி

Published On 2018-08-04 10:32 GMT   |   Update On 2018-08-04 10:32 GMT
திருத்துறைப்பூண்டி அருகே வீட்டுக்குள் லாரி புகுந்த விபத்தில் சிகிச்சை பலனின்றி தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.
திருத்துறைப்பூண்டி:

திருச்சியிலிருந்து திருத்துறைப்பூண்டிக்கு காய்கறிகள் ஏற்றி வந்த லாரி நேற்று மாலை பொருட்களை இறக்கி விட்டு திரும்பி சென்று கொண்டிருந்தது. அப்போது திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள பள்ளங்கோயில் பகுதியில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி ராமகிருஷ்ணன் (55) என்பவரது மாடி வீட்டின் போர்டிகோவில் மோதியது. இதில் போர்டிகோவில் அமர்ந்திருந்த ராமகிருஷ்ணன் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.

தகவலறிந்த திருத்துறைப்பூண்டி தீயணைப்பு துறையினரும், காவல் துறையினரும் விரைந்து சென்று வீட்டின் இடிபாடுகளில் சிக்கியிருந்த ராமகிருஷ்ணன் உடலை மீட்டனர். விபத்தில் முருகேசன் மகள் சத்யா(15) என்பவரின் கால் முறிந்தது. அவரை மீட்டு திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவாரூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி சென்ற லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News