செய்திகள்
திருமணம் செய்து கொள்வதாக கூறி மாணவி பலாத்காரம் - காதலன் ஜெயிலில் அடைப்பு
திருமணம் செய்து கொள்வதாக கூறி மாணவியை பலாத்காரம் செய்த காதலனை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
கோவை:
திருச்சி பொன்மலையை சேர்ந்தவர் சதீஷ்(வயது 25). கார் டிரைவர். இவர் திருச்சியில் இருந்து ரெயிலில் சென்ற போது, கோவை பீளமேடு பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இந்த பழக்கம் காதலாக மாறியது. 17 வயதான மாணவியிடம் ஆசை வார்த்தைகள் கூறிய சதீஷ், திருமணம் செய்து கொள்வதாக கூறி மாணவியை பலாத்காரம் செய்துள்ளார்.
இதையறிந்த மாணவியின் பெற்றோர் கோவை கிழக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் சதீஷ் மீது குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்(போக்சோ) கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை ஜெயிலில் அடைத்தனர்.
திருச்சி பொன்மலையை சேர்ந்தவர் சதீஷ்(வயது 25). கார் டிரைவர். இவர் திருச்சியில் இருந்து ரெயிலில் சென்ற போது, கோவை பீளமேடு பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இந்த பழக்கம் காதலாக மாறியது. 17 வயதான மாணவியிடம் ஆசை வார்த்தைகள் கூறிய சதீஷ், திருமணம் செய்து கொள்வதாக கூறி மாணவியை பலாத்காரம் செய்துள்ளார்.
இதையறிந்த மாணவியின் பெற்றோர் கோவை கிழக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் சதீஷ் மீது குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்(போக்சோ) கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை ஜெயிலில் அடைத்தனர்.